Friday, December 28, 2007

எங்கிருந்தாலும் வாழ்க...

உயிராய் வந்தவன் நீயே
உடன் பிறந்த்தோர் கையினாலே
உன் வாழ்வு அழிய வேண்டாம் என்று
உள்ளமதை அழித்தேனே

கண்ணீருடன் நீ போகையிலே
கலங்கி நின்றேன் நான் அன்று

சீரான பாதையிலே
சிறப்பாக சென்ற மனம்
தோளோடு உன்னை அணைக்க
தோற்றுத்தான் நின்றதுவே

உன் மனதில் நான் இருந்தேன்
என் நினைவில் நீ இருப்பாய்
வான் நிலவு சாட்சியாக
வாழ்வு தான் கொண்டு விட்டாய்

உன்னை இனிப் பார்க்க
என் மனதில் சக்தி இல்லை
என்னவனாய் இருந்தவனே
எங்கிருந்தாலும் வாழ்க

4 comments:

Dreamzz said...

/உன் மனதில் நான் இருந்தேன்
என் நினைவில் நீ இருப்பாய்
வான் நிலவு சாட்சியாக
வாழ்வு தான் கொண்டு விட்டாய்//
nice lines..

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

//
உன் மனதில் நான் இருந்தேன்
என் நினைவில் நீ இருப்பாய்
//

'இருந்தேன்' என்பதை விட 'இருப்பேன்' இன்னும் பொருத்தமாக இருக்குமே!

//உன்னை இனிப் பார்க்க
என் மனதில் சக்தி இல்லை//
- சில புரிதல்கள் வார்த்தைகளை பெற்றெடுக்கின்றான

நன்று இரசிகா :)

Rasiga said...

\\ Dreamzz said...
/உன் மனதில் நான் இருந்தேன்
என் நினைவில் நீ இருப்பாய்
வான் நிலவு சாட்சியாக
வாழ்வு தான் கொண்டு விட்டாய்//
nice lines..\\

thanks Dreamzz

Rasiga said...

\\ sathish said...
//
உன் மனதில் நான் இருந்தேன்
என் நினைவில் நீ இருப்பாய்
//

'இருந்தேன்' என்பதை விட 'இருப்பேன்' இன்னும் பொருத்தமாக இருக்குமே!

//உன்னை இனிப் பார்க்க
என் மனதில் சக்தி இல்லை//
- சில புரிதல்கள் வார்த்தைகளை பெற்றெடுக்கின்றான

நன்று இரசிகா :)\\

நீங்கள் சொல்வது போல், 'இருப்பேன்', நல்ல பொருத்தமான வார்த்தையாக தான் தெரிகிறது, சதீஷ்!

நன்றி.