எப்படி முடிந்தது ?
என்று முறிந்தது ?
நமக்குள் பிளவும்
தொடர்புக்கு முற்றுப் புள்ளியும்
உண்டானது நிஜமா?
மனசுக்குள் நினைவுகளும்
நினைவுகளின் அலைகளும்
என்றாவது அடங்குமா?
கண்களால் பரிமாறிக் கொண்டதும்
விரல்களால் உணர்ந்ததும்
உதடுகளால் எதிரொலித்ததும்
அழிந்தா போய்விடும் ?
அமர்ந்த நடந்த இடங்களும்
அனுப்பி வைத்த பரிசுகளும்
இன்றும் மணக்கும் புகைப்படமும்
கல்வெட்டுக்கள் அல்லவா ?
நேற்று மனனம் செய்தது மறந்தாலும்
நீ காற்றுவாக்கில் பேசியது கூட
இன்னும் மனதில் அழியாமல்
கனன்று கொண்டிருப்பதை அறிவாயா?
நீயும் நானும்
தூரங்களால் விலகியிருக்கலாம்...
துயரங்களால் திசைமாறியிருக்கலாம்..
சந்தர்ப்பதால் பிரிந்திருக்கலாம்..
ஆனால்...
காதல் என்றசொல் காதில் விழுந்தால்
உன் முகம் கண்முன் வந்து போவதை
தவிர்க்க முடியவில்லை...
எனக்கென உன்னோடு நான்
மனசுக்குள் வாழ்வதை
தவிர்க்க நினைக்கவுமில்லை...
ஆம்..
காதலர்கள் தோற்கலாம்....
காதல் தோற்ப்பதில்லை....
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
//அமர்ந்த நடந்த இடங்களும்
அனுப்பி வைத்த பரிசுகளும்
இன்றும் மணக்கும் புகைப்படமும்
கல்வெட்டுக்கள் அல்லவா ?//
arumaiyaana kavidhai!
//காதல் என்றசொல் காதில் விழுந்தால்
உன் முகம் கண்முன் வந்து போவதை
தவிர்க்க முடியவில்லை...
எனக்கென உன்னோடு நான்
மனசுக்குள் வாழ்வதை
தவிர்க்க நினைக்கவுமில்லை...
ஆம்..
காதலர்கள் தோற்கலாம்....
காதல் தோற்ப்பதில்லை....//
beautifull lines :)
//காதல் என்றசொல் காதில் விழுந்தால்
உன் முகம் கண்முன் வந்து போவதை
தவிர்க்க முடியவில்லை...//
அருமையா இருக்கு.
டெம்பிளேட் நல்லா இருக்கு
@Dreamzz
Thanks
@ Nagai Siva
Thanks for noticing my template change & mentioning it in your comment, appreciate that!!
// காதல் என்றசொல் காதில் விழுந்தால்
உன் முகம் கண்முன் வந்து போவதை
தவிர்க்க முடியவில்லை...
எனக்கென உன்னோடு நான்
மனசுக்குள் வாழ்வதை
தவிர்க்க நினைக்கவுமில்லை...//
கவிதை ரொம்பவே நல்லாயிருக்குங்க..
நம்ம ரசனை கட்சி ஆளாச்சே நீங்க...
வாழ்த்துக்கள் உங்களுக்கும்,உங்க ரசனைக்கும்..
//எனக்கென உன்னோடு நான்
மனசுக்குள் வாழ்வதை
தவிர்க்க நினைக்கவுமில்லை...//
அருமை!
//அமர்ந்த நடந்த இடங்களும்
அனுப்பி வைத்த பரிசுகளும்
இன்றும் மணக்கும் புகைப்படமும்
கல்வெட்டுக்கள் அல்லவா ?//
நிதர்சனம்!
இதை படித்துப்பாருங்களேன்
//எனக்கென உன்னோடு நான்
மனசுக்குள் வாழ்வதை
தவிர்க்க நினைக்கவுமில்லை...//
காதலின் காயத்தை அருமையாக உணர்த்தும் கவிதை…
உங்களுக்கு ரொம்ப நல்ல கவிதை எழுது வருகிறது, தொடர்ந்து எழுதுங்கள்…
தினேஷ்
\\ ரசிகன் said...
// காதல் என்றசொல் காதில் விழுந்தால்
உன் முகம் கண்முன் வந்து போவதை
தவிர்க்க முடியவில்லை...
எனக்கென உன்னோடு நான்
மனசுக்குள் வாழ்வதை
தவிர்க்க நினைக்கவுமில்லை...//
கவிதை ரொம்பவே நல்லாயிருக்குங்க..
நம்ம ரசனை கட்சி ஆளாச்சே நீங்க...
வாழ்த்துக்கள் உங்களுக்கும்,உங்க ரசனைக்கும்..\\
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 'ரசனை'கட்சிக்காரரே.
\\ sathish said...
//எனக்கென உன்னோடு நான்
மனசுக்குள் வாழ்வதை
தவிர்க்க நினைக்கவுமில்லை...//
அருமை!
//அமர்ந்த நடந்த இடங்களும்
அனுப்பி வைத்த பரிசுகளும்
இன்றும் மணக்கும் புகைப்படமும்
கல்வெட்டுக்கள் அல்லவா ?//
நிதர்சனம்!
இதை படித்துப்பாருங்களேன்\\
நீங்கள் சுட்டிக்காட்டிய உங்கள் பதிவினை படித்து ரசித்தேன் சதீஷ், நன்றி.
\\ தினேஷ் said...
//எனக்கென உன்னோடு நான்
மனசுக்குள் வாழ்வதை
தவிர்க்க நினைக்கவுமில்லை...//
காதலின் காயத்தை அருமையாக உணர்த்தும் கவிதை…
உங்களுக்கு ரொம்ப நல்ல கவிதை எழுது வருகிறது, தொடர்ந்து எழுதுங்கள்…
தினேஷ்\\
தினேஷ் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
Post a Comment