Wednesday, December 26, 2007

சங்கமம்

உன் வார்த்தைகள் மெளனமாக
என்னோடு உறவாட - என்
மெளனங்கள் வார்த்தையாக
உருப்பெற நம்முள்
உருவான காதல் உயிரோடு
இரண்டறக் கலந்தன...

உன் மெளனம் கலைத்து
ஒர் வார்த்தை பேசாயா
என காதுகள் தவம் இருக்க - நம்
விழிகள் ஆயிரமாயிரம் வார்த்தைகள்
பரிமாறிக் கொண்டன....

நினைவு என்னும் பெட்டகத்தில்
விழி பேசும் வார்த்தைகள்
காவியமாக உருப்பெற்றுக் கொண்டிருந்தன
இதயத்தின் துணையுடன்....

என் உயிர் அவனோடு சங்கமிக்க
அவன் உயிர் என்னோடு கலக்க
நம் உயிர்களை இடம் மாற்றிக்கொண்டோம்..

8 comments:

நவீன் ப்ரகாஷ் said...

//நினைவு என்னும் பெட்டகத்தில்
விழி பேசும் வார்த்தைகள்
காவியமாக உருப்பெற்றுக் கொண்டிருந்தன
இதயத்தின் துணையுடன்....//

அழகோ அழகு ரசிகா :)))
மிகவும் ரசித்தேன் !!!

Dreamzz said...

Nice one :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

//
நினைவு என்னும் பெட்டகத்தில்
விழி பேசும் வார்த்தைகள்
காவியமாக உருப்பெற்றுக் கொண்டிருந்தன
இதயத்தின் துணையுடன்....
//

'இதயத்தின் துணையுடன்' என்னும் இரண்டு வார்த்தைகள் இன்னும் கூட்டியது அழகை :)

இரசிக்க வைக்கும் கவிதைகள் இரசிகா!

தினேஷ் said...

நல்ல சிந்தனை, சிந்தனைக்கேற்ற சரியான வார்த்தைகள்…

நல்ல கவிதை வாழ்த்துக்கள்...

தினேஷ்

Rasiga said...

\\ நவீன் ப்ரகாஷ் said...
//நினைவு என்னும் பெட்டகத்தில்
விழி பேசும் வார்த்தைகள்
காவியமாக உருப்பெற்றுக் கொண்டிருந்தன
இதயத்தின் துணையுடன்....//

அழகோ அழகு ரசிகா :)))
மிகவும் ரசித்தேன் !!!
\\

உங்கள் அழகான ரசனைக்கு நன்றி நவீன் ப்ரகாஷ்.

Rasiga said...

\\ Dreamzz said...
Nice one :)
\\

Thanks a ton, Dreamzz.

Rasiga said...

\\ sathish said...
//
நினைவு என்னும் பெட்டகத்தில்
விழி பேசும் வார்த்தைகள்
காவியமாக உருப்பெற்றுக் கொண்டிருந்தன
இதயத்தின் துணையுடன்....
//

'இதயத்தின் துணையுடன்' என்னும் இரண்டு வார்த்தைகள் இன்னும் கூட்டியது அழகை :)

இரசிக்க வைக்கும் கவிதைகள் இரசிகா!\\

உங்கள் ரசிப்பிற்க்கு மனமார்ந்த நன்றி சதீஷ்.

Rasiga said...

\\ தினேஷ் said...
நல்ல சிந்தனை, சிந்தனைக்கேற்ற சரியான வார்த்தைகள்…

நல்ல கவிதை வாழ்த்துக்கள்...

தினேஷ்\\

முதன்முறை விஜயம் செய்திருக்கிறீர்கள், நன்றி தினேஷ்!