Thursday, January 24, 2008

இதன் பெயர்தான் காதலோ???

கண்கட்டி வித்தை காட்டி
என்னுள் நுழைந்துகொண்டாயே
கரம் கொண்டு தடுத்து விட
முயற்சித்தேன் காற்றாய் மாறி
விரல்களுக்கிடையில்தவழுகின்றாய்.....

காற்றுக்கள் அனைத்தும் உன்
பெயரை சுமந்து வந்து
ரீங்காரம் இடுகின்றது
என் காதினிலே....

ஒவ்வொரு நிமிடமும்
உன் பெயரை வேதம் போல்
உச்சரிக்கின்றேன்...

கோயில் கற்பகிரகததில்
இறைவனுக்கு பதில்
உன் முகம்...

பாதத்தை மெதுவாய்
அடிவைத்து நடக்கின்றேன்
தரையில் காணும் மணல்துகல்களில்
உன் முகம் காண்பதால்...

இதற்கு பெயர் தான் காதலோ
காணும் அனைத்திலும்
உன் முகம்
கேட்கும் குரலனைத்தும்
உன் குரல்!!

6 comments:

தினேஷ் said...

காதலை எவ்வளவு அழகாக கவிதையில் சொல்லிவிட்டு … இதன் பெயர்தான் காதலோ??? என்று கேள்விக்குறி வேறு (???) பொட்டு இருக்கிறிர்கள்?

காதல் கவிதை கலக்கல்…

தினேஷ்

Dreamzz said...

//இதற்கு பெயர் தான் காதலோ
காணும் அனைத்திலும்
உன் முகம்
கேட்கும் குரலனைத்தும்
உன் குரல்!!//
வாவ் :) சூப்பர் கவிதை

Dreamzz said...

இருக்கலாம்.. காதலாய்

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

//
கரம் கொண்டு தடுத்து விட
முயற்சித்தேன் காற்றாய் மாறி
விரல்களுக்கிடையில்தவழுகின்றாய்.....
//

- அருமை!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

//
பாதத்தை மெதுவாய்
அடிவைத்து நடக்கின்றேன்
தரையில் காணும் மணல்துகல்களில்
உன் முகம் காண்பதால்...
//

அட! நல்ல கற்பனை இரசிகா :))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

:(( நான் போட்ட comment ஒன்னு missing :((