Sunday, January 13, 2008

ஓய்வில்லா காதல்

அந்த நிலவும் ஓய்வு தேடிடும்
உன் முகத்தினில் இளைப்பாறிட,
அந்த அலைகள் ஓய்வு தேடிடும்
உன் பாதத்தில் பள்ளி கொண்டிட,
அந்த காற்றும் ஓய்வு தேடிடும்
உன் சுவாசத்தில் கலந்திட,
அந்த பிரம்மனும் ஓய்வு தேடுவான்.உன்னிடம்
உன் போல ஒருத்தியை படைத்திட, ஆனால்
நான் மட்டும் ஓய்வு கொள்ள மாட்டேன்
உன்னை காதலிப்பதை விட்டு.

6 comments:

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

அருமையான கற்பனை!

அந்த மலரும் ஓய்வு தேடிடும்
உன் கூந்தலில் நீ சூடிட!

இது நல்ல இருக்கா :))

Dreamzz said...

நல்லா இருக்குங்க

தினேஷ் said...

ஒய்வில்லா காதல் கவிதையில் இல்லை ஒரு துளிகூட தோய்வு…

இனிய பொங்கள் நல்வாழ்த்துக்கள்,

தினேஷ்

Rasiga said...

\\ sathish said...
அருமையான கற்பனை!

அந்த மலரும் ஓய்வு தேடிடும்
உன் கூந்தலில் நீ சூடிட!

இது நல்ல இருக்கா :))\\

அட....இது ரொம்ப நல்லாயிருக்குதே!

உங்கள் ரசனைக்கு நன்றி சதீஷ்.

Rasiga said...

\\ Dreamzz said...
நல்லா இருக்குங்க\\

Thanks Dreamzz.

Rasiga said...

\\ தினேஷ் said...
ஒய்வில்லா காதல் கவிதையில் இல்லை ஒரு துளிகூட தோய்வு…

இனிய பொங்கள் நல்வாழ்த்துக்கள்,

தினேஷ்\\

Wish you a Happy Pongal Dinesh!